Kathir News
Begin typing your search above and press return to search.

ஆளுநர் தமிழிசை வாக்கை செலுத்தினார்!

ஆளுநர் தமிழிசை வாக்கை செலுத்தினார்!

ThangaveluBy : Thangavelu

  |  19 Feb 2022 7:54 AM GMT

தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கை செலுத்தினார்.

தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் காலை முதலே வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதே போன்று அரசியல் பிரமுகர்கள், ஆளுநர்கள் என பலரும் தங்களது வாக்குகளை செலுத்த காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர்.

இந்நிலையில், காலை 7 மணிக்கு முதல் ஆளாக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை, விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழகத்தில் எனது வாக்கை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். அதே போன்று உள்ளாட்சித் என்பது மிகவும் முக்கியமானது. நாம் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மேலும், தெலங்கானாவில் பழங்குடியினர் நடத்தும் யாத்திரையில் பங்கேற்க இருந்தாலும், முதல் ஆளாக என்னுடைய வாக்கை செலுத்திவிட்டு செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News