Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் - வீடியோ எடுத்து பண்ணை வீட்டில் அரங்கேறிய கொடுமை !

The victim has accused Arumana Stephen and seven others of spiked her drink and gang-raping her after she fell unconscious. The pastor and his friends then filmed the act, confined her inside a farmhouse and repeatedly raped her.

தமிழகத்தில் திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் - வீடியோ எடுத்து பண்ணை வீட்டில் அரங்கேறிய கொடுமை !

TN pastor booked for gang-raping a woman and recording the act/ Image Source: Arunamaiorg

MuruganandhamBy : Muruganandham

  |  13 Aug 2021 2:16 AM GMT

திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவை பதிவு செய்ததாக, அருமனை கிறிஸ்தவ சங்க பாதிரியார் அருமை ஸ்டீபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிரியாரோடு சேர்ந்து மேலும் ஏழு பேர் குற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்துக்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் வகையில் பேசிய பொழுது, அவரோடு சேர்ந்து இந்து தெய்வங்களை துஷ்பிரயோகம் செய்ததற்காக பாஸ்டர் ஸ்டீபன் ஏற்கனவே கைது செய்யப்பட்டவராவார்.

காவல்துறை அறிக்கையின்படி, 36 வயது பெண்மணியை அருமனை ஸ்டீபன் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் அந்தச் செயலைப் பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்டீபன் மற்றும் ஏழு பேர் குடிபோதையில் இருந்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவின்றி கீழே விழுந்த நிலையில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பாஸ்டரும் அவரது நண்பர்களும் இந்த செயலை படம்பிடித்து, ஒரு பண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

ஏப்ரல் மாதம், பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் செய்தார். ஆனால் ஆளும் திமுகவுடன் அவர்களின் நெருங்கிய உறவு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஜெபர்சன் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். வெறுப்பு பேச்சு வழக்கில் ஸ்டீபனை காவல்துறையினர் கைது செய்த பிறகு, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன், பாதிக்கப்பட்டவர் ஸ்டீபனுக்கு எதிராக மற்றொரு ஆன்லைன் புகார் அளிக்க முன்வந்தார்.

ஸ்டீபன், திமுக செயல் பிரமுகர் ஜான் பிரைட், ஹென்ஸ்லின், காலிஸ்டர் ஜெபராஜ் மற்றும் பிற குற்றவாளிகள் மீது ஐபிசி பிரிவுகளின் கீழ் சட்டவிரோதமாக சிறைப்பிடித்தல், திருடுதல், பாலியல் துஷ்பிரயோகம், கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News