Kathir News
Begin typing your search above and press return to search.

கனமழையால் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வரும் நிலையில் இன்று (நவம்பர் 12) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 Nov 2021 2:58 AM GMT

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வரும் நிலையில் இன்று (நவம்பர் 12) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விழுப்புர், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தருமபுரியில் இடைவிடாமல் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Chronicle


Next Story
கதிர் தொகுப்பு
Trending News