Kathir News
Begin typing your search above and press return to search.

செங்கல்பட்டில் பயங்கரம்: அடுத்தடுத்து இரட்டைக்கொலையால் மக்கள் அச்சம்!

மாவட்ட எஸ்.பி. அரவிந்தன், ஏ.எஸ்.பி. ஆதர்ஷ் பட்சேரா நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். செங்கல்பட்டில் ஒரே நாளில் சில குறிப்பிட்ட நிமிடங்களிலேயே அடுத்தடுத்த கொலை செய்துள்ள சம்பவம் நகர மக்களை அச்சமடைய செய்துள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விகுறியாக இருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செங்கல்பட்டில் பயங்கரம்: அடுத்தடுத்து இரட்டைக்கொலையால் மக்கள் அச்சம்!

ThangaveluBy : Thangavelu

  |  7 Jan 2022 4:15 AM GMT

செங்கல்பட்டு நகரத்தில் நேற்று (ஜனவரி 6) அடுத்தடுத்த இரண்டு இடங்களில் இரட்டைக்கொலை நடந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு நகரம், கே.கே. தெருவை சேர்ந்தவர் கேமநாஜ், இவர் அதிமுகவில் உள்ளார். அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறது. இவரது மகன் கார்த்திக் என்கின்ற அப்பு கார்த்திக் 29, இவர் நேற்று (ஜனவரி 6) டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது கார்த்தியை பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, கத்தியால் குத்தி கொடுரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தால் கார்த்திக் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தப்பியோடி அதே கும்பல் செங்கல்பட்டு நகரம், மேட்டுத்தெரு பகுதியில் சீனுவாசன் எனபவரின் மகன் மகேஷ் 22, என்பவரையும் சராமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது. இந்த சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்.பி. அரவிந்தன், ஏ.எஸ்.பி. ஆதர்ஷ் பட்சேரா நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். செங்கல்பட்டில் ஒரே நாளில் சில குறிப்பிட்ட நிமிடங்களிலேயே அடுத்தடுத்த கொலை செய்துள்ள சம்பவம் நகர மக்களை அச்சமடைய செய்துள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விகுறியாக இருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Source,Image Courtesy: Dinamani


Next Story
கதிர் தொகுப்பு
Trending News