'விவேகானந்தர் போல் பிரதமர் மோடி நாட்டுக்காக பாடுபடுகிறார்' - அமைச்சர் மீனாட்சி லேகி
விவேகானந்தர் போன்று பிரதமர் மோடி நாட்டு நலனுக்காக பாடுபட்டு வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கூறியுள்ளார்.
By : Mohan Raj
விவேகானந்தர் போன்று பிரதமர் மோடி நாட்டு நலனுக்காக பாடுபட்டு வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கூறியுள்ளார்.
நேற்று என் யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய கலாச்சார மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி வந்திருந்தார், பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு மூலம் சென்ற அவர் விவேகானந்தர் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து யோகாசனம் செய்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'யோகா செய்வதன் மூலம் மனம் உடல் ஆன்மா ஒருங்கிணைக்க படுகிறது நம்மைச் சுற்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை யோகப் பயிற்சியால் ஏற்படும்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'மிகப் பெரிய நாடான இந்தியா தியானத்தினால் சுதந்திரம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை சுவாமி விவேகானந்தர் ஏற்படுத்தினார் நாட்டின் கலாச்சாரத்திலும், ஆன்மிகத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் நாட்டின் கலாச்சாரத்தை நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டது போல் பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டு நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்' என மீனாட்சி லேகி தெரிவித்தார்.