Kathir News
Begin typing your search above and press return to search.

கிடுகிடுவென நிரம்பும் வீராணம் ஏரி ! 2 நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் !

சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாக உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

கிடுகிடுவென நிரம்பும் வீராணம் ஏரி ! 2 நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் !

ThangaveluBy : Thangavelu

  |  22 Aug 2021 9:32 AM GMT

சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாக உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் வீராணம் ஏரியில் இருந்து தினமும் குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

இந்நிலையில், 47.50 அடி உயரம் கொண்ட வீராணம் ஏரி நீர்மட்டம் தற்போது 46.46 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,844 கன அடி வீதமாக உள்ள நிலையில், இன்னும் 2 நாட்களில் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Polimer

Image Courtesy: Polimernews


Next Story
கதிர் தொகுப்பு
Trending News