Kathir News
Begin typing your search above and press return to search.

பெண் கிராம நிர்வாகியை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி !

பெண் கிராம நிர்வாகியை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி !

DhivakarBy : Dhivakar

  |  10 Oct 2021 5:20 AM GMT

பெண் கிராம நிர்வாகியை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர் குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கஸ்தூரி.இவரிடம் தண்ணீர் குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகாவின் கணவரும், திமுக கிளை செயலாளருமான தயாளன் என்பவர் பெங்களூரில் உயிரிழந்த ஒருவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுள்ளார். தயாளனுக்கு ஆதரவாக ஊராட்சிமன்ற எழுத்தர் ஸ்ரீனிவாசன் கஸ்துரியிடம் பேசியுள்ளார் .

இறப்பு சான்றிதழ் தர கிராம நிர்வாக அலுவலர் கஸ்தூரி மறுத்துள்ளார்.

இதனையடுத்து தயாளன் மற்றும் சீனிவாசன் தன்னை பணி செய்ய விடாமல் தகாத வார்த்தையால் திட்டியதாக செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News J

Next Story
கதிர் தொகுப்பு
Trending News