Kathir News
Begin typing your search above and press return to search.

குக்கிராமங்களும் மருத்துவ வசதி பெறும்.. 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்.. முதலமைச்சர் துவக்கினார்.!

குக்கிராமங்களும் மருத்துவ வசதி பெறும்.. 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்.. முதலமைச்சர் துவக்கினார்.!

குக்கிராமங்களும் மருத்துவ வசதி பெறும்.. 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்.. முதலமைச்சர் துவக்கினார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2020 9:53 AM GMT

தமிழகம் முழுவதும் கிராமம் மற்றும் தூர பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கென்று அரசு தலைமை மருத்துவமனை, ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவை மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் மலைப்பகுதி மற்றும் ஊராட்சியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரமான கிராமப்பகுதிகள், மருத்துவமனையிலிருந்து தொலைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அம்மா மினி கிளினிக் திட்டம் ஆரம்பிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இத்திட்டத்தை இன்று சென்னையில் உள்ள வியாசர்பாடி, ராயபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் இருப்பர்.

இந்த கிளினிக்குகளில் சளி, காய்ச்சல், உடல்வலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதோடு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு மாதாந்திர மருந்துகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரையிலும் இந்த மினி க்ளினிக் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மினி கிளினிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கிராமபுற மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்திற்காக மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News