Kathir News
Begin typing your search above and press return to search.

செஞ்சி கோட்டை கோவில் சிலைகள் மர்ம நபர்களால் சேதமாக்கப்பட்ட சம்பவம்!

விழுப்புரத்தைச் சேர்ந்த செஞ்சி கோட்டையில் உள்ள கோவில் சிலைகள் தற்போது சேதமாக்கப் பட்டுள்ளது.

செஞ்சி கோட்டை கோவில் சிலைகள் மர்ம நபர்களால் சேதமாக்கப்பட்ட சம்பவம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Aug 2022 2:47 AM GMT

விருதுநகர் மாவட்டம் செஞ்சி கோட்டை பகுதியில் அமைந்துள்ளது தான் கமலக்கண்ணி அம்மன் என்ற கோவில் உள்ளது. இந்த கோவில் கோவில் சிலைகள் தற்போது சேதமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை கோவில் நிர்வாகம் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளது. செஞ்சியில் அமைந்துள்ள ராஜகிரி கோட்டை பல்வேறு கோவில்களுக்கு உள்ளது ஆனால் கோவில்கள் இருந்தாலும் இக்கோவில்களில் சிலைகளுக்கு வழிபாடும் அல்லது வேறு ஏதும் விசேஷங்களும் நடை பெறுவது கிடையாது.



இங்கு உள்ள அம்மன் கோவில் ஆன கமலக்கண்ணி அம்மன் கோவிலில் மட்டும் சாமி வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் தான் தற்போது இந்த ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. நேற்று காலை 10 மணி அளவில் பூசாரி ராமச்சந்திரன் என்பவர் கோவிலுக்கு பூஜைக்காக சென்றுள்ளார். அப்பொழுதுதான் கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த அம்மன் சிலைக்கு கீழே தள்ளப்பட்டு இருப்பது தெரியவந்தது.


இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி சுவற்றில் சுவாமி சிலையை சாய்த்துவைத்து விளக்கமான பூச்சிகளை செய்துள்ளார். அதன்பிறகு அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் ஒன்றை அளித்துள்ளார். இந்த தகவலை கண்டறிந்த அந்த பகுதி இளைஞர்கள் இதுகுறித்து போராட்டத்திலும் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து இளைஞர்களே சமாதானப்படுத்தி குற்றவாளிகள் உடனே அடையாளம் காணப்பட்ட தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது வைத்தார்கள்.

Input & Image courtesy:Dinamalar news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News