Kathir News
Begin typing your search above and press return to search.

விழுப்புரம் : தாலுக்கா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டதால், வட்டாட்சியரின் வாகனத்திற்கு தீ வைத்த இளைஞன் ! இதுதான் விடியல் ஆட்சியின் அறிகுறியா ?

விழுப்புரம் : தாலுக்கா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டதால், வட்டாட்சியரின் வாகனத்திற்கு தீ வைத்த இளைஞன் ! இதுதான் விடியல் ஆட்சியின்  அறிகுறியா ?

DhivakarBy : Dhivakar

  |  25 Oct 2021 9:07 AM GMT

விழுப்புரம் மாவட்டத்தில், தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதை கண்டு கோபமடைந்த இளைஞன் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ வைத்துள்ளார் .

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தாசில்தார் வாகனம் திடீரென தீப்பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பற்றி எரியும் தீயை அணைத்தனர்.



இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது.

இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் காரின் முன்பக்க கண்ணாடியை கற்களால் உடைத்து, பின்னர் பெயிண்டில் கலக்கப்படும் வார்னிஷை காரில் ஊற்றி தீ வைக்கப்பட்ட காட்சி பதிவாகியுள்ளது.



இதனையடுத்து ரஞ்சித்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

தாலுக்கா அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதால் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ வைத்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து செஞ்சி நீதித்துறை முன்பு ஆஜர்படுத்திய காவல் துறையினர் பின்பு ரஞ்சித்தை சிறையில் அடைத்தனர்.

News J


Next Story
கதிர் தொகுப்பு
Trending News