Kathir News
Begin typing your search above and press return to search.

விடியல் அரசின் அலட்சியம்: அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்! நோயாளிகள், மருத்துவர்கள் கடும் அவதி!

சென்னையில் திமுக அரசு சரியான கால்வாய்களை தூர்வாராமல் விட்டதின் காரணமாக தற்போது அரசு மருத்துவமனை ஒன்றில் மழைநீர் புகுந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

விடியல் அரசின் அலட்சியம்: அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்! நோயாளிகள், மருத்துவர்கள் கடும் அவதி!

ThangaveluBy : Thangavelu

  |  11 Nov 2021 5:38 AM GMT

சென்னையில் திமுக அரசு சரியான கால்வாய்களை தூர்வாராமல் விட்டதின் காரணமாக தற்போது அரசு மருத்துவமனை ஒன்றில் மழைநீர் புகுந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் பல இடங்கள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போது சென்னை, கே.கே.நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக நோயாளிகள் மற்றும் உறவினர்கள், மருத்துவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


மழைநீர் மருத்துவமனை வார்டுக்குள் புகுந்துள்ளதால், நோயாளிகள் தண்ணீரில் நனைந்தபடி செல்லும் நிலை உருவாகியுள்ளது. உடனடியாக மழைநீரை அகற்ற வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். திமுக அரசு அமைந்த பின்னர் சென்னையில் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News