Kathir News
Begin typing your search above and press return to search.

பேருந்தில் பிக்பாக்கெட் அடிப்பதை பார்த்திருப்போம்.. ஆனால் சென்னையில் அரசுப்பேருந்தை தூக்கிய மர்ம நபர்கள்.!

பேருந்தில் பிக்பாக்கெட் அடிப்பதை பார்த்திருப்போம்.. ஆனால் சென்னையில் அரசுப்பேருந்தை தூக்கிய மர்ம நபர்கள்.!

பேருந்தில் பிக்பாக்கெட் அடிப்பதை பார்த்திருப்போம்.. ஆனால் சென்னையில் அரசுப்பேருந்தை தூக்கிய மர்ம நபர்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Feb 2021 10:49 AM GMT

சென்னை அண்ணா நகர் பேருந்து டிப்போவில் இருந்து, மாநகரப் பேருந்து கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை பேருந்துகளில் பொருட்களை கடத்திச் செல்வதை நாம் அறிந்திருப்போம். மேலும், பிக்பாக்கெட் அடித்திருப்பதையும் பார்த்திருப்போம். ஆனால் சென்னை அண்ணா நகர் பேருந்து டிப்போவில் இருந்த அரசுப்பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

டிரைவர் டிப்போ உள்ளே சென்று கையெழுத்து போட்டுவிட்டு, மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, பேருந்து அந்த இடத்தில் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். சென்னை அண்ணாநகர் டிப்போவில் வழக்கம் போன்று டிரைவர்கள் பேருந்துகளை எடுப்பதற்கு வருவார்கள். அப்போது டிப்போவில் இருந்த 27பி என்ற வழித்தட எண் கொண்ட அரசுப் பேருந்தை டிரைவர் எடுத்துச்சென்று வாசல் முன்புறம் நிறுத்தியுள்ளார்.

பின்னர், கையெழுத்து போடுவதற்காக டிப்போ உள்ளே சென்றுவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்க்கும்போது பேருந்து இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அரசுப்பேருந்து காணாமல் போனது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசாருக்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து டிப்போவில் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், அந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில் அரசுப்பேருந்து காணாமல் போனது அனைத்து டிரைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News