Kathir News
Begin typing your search above and press return to search.

நீலகிரியில் காட்டு யானை உயிரிழப்பு.. கமல் கடும் கண்டனம்.!

நீலகிரியில் காட்டு யானை உயிரிழப்பு.. கமல் கடும் கண்டனம்.!

நீலகிரியில் காட்டு யானை உயிரிழப்பு.. கமல் கடும் கண்டனம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jan 2021 1:15 PM GMT

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று தீக்காயங்களுடன் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இதற்கு பலர் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரியில் காட்டு யானையை எரியும் டயரை வீசி கொலை செய்த சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், காட்டு யானையை எரியும் டயரை வீசி கொலை செய்த சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், “காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது,” எனக் கூறியுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News