Kathir News
Begin typing your search above and press return to search.

கோயிலை கைப்பற்றிய அறநிலையத்துறை? பெண்கள் சாமியாடியும், ஆண்கள் கோயில் மீது ஏறி கோஷங்கள் எழுப்பினர்!

கோயிலை கைப்பற்றிய அறநிலையத்துறை? பெண்கள் சாமியாடியும், ஆண்கள் கோயில் மீது ஏறி கோஷங்கள் எழுப்பினர்!

ThangaveluBy : Thangavelu

  |  12 Jan 2022 6:05 AM GMT

கிராமத்தில் உள்ள கோயிலை அறநிலையத்துறை கைப்பற்றுவதற்காக வந்திருப்பதை அறிந்த பெண்கள் சாமியாடியும், மற்றும் ஆண்கள் கோயிலுக்கு மேல் ஏறி தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகாமையில் மாங்குடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் என்ற கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை காரணமாக விழாக்கல் நடத்தப்படாமல் இருந்துள்ளது. இதனால் இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தற்போது வரை தீர்வு எட்டப்படாமல் இருந்ததால் அறநிலையத்துறை அதிகாரிகள் இரண்டு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.


இந்நிலையில் கடந்த நேற்று (ஜனவரி 11) இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் கிராமத்திற்கு சென்று கோயிலின் சாவியை வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த பெண்கள் மற்றும் ஆண்கள், சிறுவர்கள் என கோயில் முன்பாக திரண்டுவிட்டனர். கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாமியாடி எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போன்று ஆண்கள் கோயில் கோபுரத்தின் மீது ஏறி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். எக்காரணத்தை கொண்டும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து செல்வதற்கு விடமாட்டோம் என்ற கோஷங்களை பதிவு செய்தனர். கோயில் பிரச்சினை தீரவே நாங்கள் இந்த முடிவுகளை எடுத்தோம். அனைவரும் ஒன்றிணைந்து கடவுளை வழிபட நாங்கள் முயற்சி மேற்கொள்கிறோம் என்று கூறிவிட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

Source, Image Courtesy: Nakkheeran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News