Kathir News
Begin typing your search above and press return to search.

புதிதாக திறக்கப்பட்ட சென்னை மெட்ரோவில் 13 திருநங்கைகளுக்கு பணி.!

புதிதாக திறக்கப்பட்ட சென்னை மெட்ரோவில் 13 திருநங்கைகளுக்கு பணி.!

புதிதாக திறக்கப்பட்ட சென்னை மெட்ரோவில் 13 திருநங்கைகளுக்கு பணி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Feb 2021 4:12 PM GMT

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் 13 திருநங்கைகள் வேலையில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் முன்னேறும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். அவர்களின் பணிகள் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குது மற்றும் பயணிகளுக்கு தேவையான தகவல்களை அளிப்பது போன்ற பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் சேவைகளை மற்ற பயணிகள் பாராட்டும் அளவிற்கு நடந்து கொள்வார்கள் என அவர்கள் தெரிவித்தனர். இவர்கள் மற்ற திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வார்கள் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News