மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் சிபிஐ அதிரடி அறிக்கை!!
By : Bharathi Latha
Update: 2026-02-05 18:09 GMT
மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் அஜித்குமாரின் மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளதாக சிபிஐ அறிக்கை தாக்கலில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிபிஐ தரப்பில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை. புகார் முடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும் என நீதிபதி கூறினார்.