எரிபொருள் நெருக்கடி!! மாநிலங்களுடன் பிரதமர் ஆலோசனை!!
By : Bharathi Latha
Update: 2026-03-28 10:14 GMT
இந்தியாவின் எரிபொருள் தேவை பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் தேவையில் 85%, எல்பிஜி தேவையில் 60%, எல்என்ஜி தேவையில் 50% இறக்குமதி செய்யப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் பதற்றத்தால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள மாநில அரசுகள் ஒன்றிணைய வேண்டும் என கூறினார்.
அடுத்த 60 நாட்களுக்குள் தேவையான பெட்ரோல், டீசல், ஒரு மாதத்துக்கு தேவையான எல்பிஜி இருப்பு உள்ளது. ஆனால் சமூக வலைதள வதந்திகளால் செயற்கையாக நெருக்கடி உருவாகிறது.