300 கோடியை கடந்த அல்லு அர்ஜுனின் 'புஷ்பா'.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடித்த படம் 'புஷ்பா'. இரண்டு பாகமாக வெளிவரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் இந்தியா முழுவதம் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் பக்கா மசாலா படமாக வெளியான 'புஷ்பா' திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
வெளியானதில் இருத்து இப்படம் மொத்தமாக 300 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் மட்டும் 22 கோடிகளை வசூலில் கடந்துள்ளது. ஹிந்தியில் வெளியான '83' படத்தின் வசூலை விட புஷ்பா படத்தின் வசூல் அதிகம்.