குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் திரௌபதி முர்மு குறித்த பதிவு - ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு

Update: 2022-06-28 12:10 GMT

குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் திரௌபதி முர்மு குறித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது உத்தர பிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது உத்தரப்பிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு குறித்து பாண்டவர் யார்? கௌரவர்கள் யார் என கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.




 


இவ்வாறு சர்ச்சையாக குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீது விமர்சனத்தை வைத்த காரணத்தினால் உத்தர பிரதேச மாநில போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Source - Polimer

Similar News