ஓடாத படத்திற்கு 100 கோடி செலவா - விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

லைகர் திரைப்படம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்க துறையினர் 12 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Update: 2022-12-02 03:02 GMT

லைகர் திரைப்படம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்க துறையினர் 12 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான லைகர் திரைப்படம் 100 கோடி ரூபாய் பொருள் செலவில் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்க துறையினர் அவரிடம் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை நிறைவடைந்த உடன் கருத்து தெரிவித்து விஜய் தேவரகொண்டா 'பிரபலமானவராக இருந்தால் சில பிரச்சனைகளை சந்திப்பது வாழ்க்கையில் ஒரு அனுபவம்' என தெரிவித்தார். அமலாக்கத்துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக தெரிவித்த விஜய் தேவரகொண்டா தனது கடமையை செய்திருப்பதாகவும் அவர்கள் தன்னை மீண்டும் விசாரணைக்கு அழைக்கவில்லை எனவும் கூறினார்.

Similar News