சரத்குமார், கெளதம் கார்த்திக் இணையும் கிரைம் திரில்லர்

தர்ஷிணாமூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் பாஷா பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம், பிக் பிராண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் படம் கிரிமினல்.

Update: 2023-01-26 12:29 GMT

தர்ஷிணாமூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் பாஷா பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம், பிக் பிராண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் படம் கிரிமினல். கிரைம் தில்லர் கதையான இப்படம் மதுரையை பின்னணியாக கொண்டு உருவாக இருக்கிறது. இப்படத்தில் முதன்முதலாக கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கிறார்கள்.

பிரசன்னா குமார் இசையமைத்து சாந்தி எஸ் ஒளிப்பதிவு செய்கிறார். மதுரையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மதுரையில் எங்களுடைய புதிய ப்ராஜெக்ட் ஆன கிரிமினல் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. 40 நாட்களில் மொத்த படத்தையும் ஒரே செயலாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களின் நடிக்க இருக்கிறார்கள். கிரிமினலாக கௌதம் கார்த்திக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார்கள். நடிகர் சரத்குமார் காவல்துறை அதிகாரியாக பல படங்களில் சைலீசாக நடித்திருந்தாலும், பார்வையாளர்களுக்கு அவர் புதிதாகவும், தனித்துவமாகவும் தெரிவார் இன்று தயாரிப்பாளர் மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.

Similar News