பழைய வாழ்க்கையை மறவாத சுரேஷ் கோபியின் நெகிழ்ச்சியான செயல்

மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார் நடிகர் சுரேஷ்கோபி.

Update: 2022-06-20 13:33 GMT

மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார் நடிகர் சுரேஷ்கோபி.




மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி, இவர் தற்போது 255 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தனக்கு வழங்கப்பட்ட அட்வான்ஸ் தொகையிலிருந்து இரண்டு லட்சத்தை மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி.


 



அதற்கு காரணம் சினிமாவுக்குள் நுழையும் முன் சுரேஷ்கோபி மிமிக்கிரி சங்க கலைஞராக இருந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது, அதனால் அவர்கள் படும் சிரமங்கள் தனக்கு தெரியும் என்பதால் ஒவ்வொரு படம் வரும்போதும் எண்ணிக்கை சங்கத்துக்கு நன்கொடை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

Similar News