நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக கவுண்டமணி- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தனது நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த கவுண்டமணி சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.

Update: 2023-07-26 06:15 GMT

தமிழ் திரையுலகில் 40 வருடங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக கொடிக்கட்டி பறந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். சில வருடங்களுக்கு முன்பு '49 ஓ' எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்து இருந்தார். அதன் பிறகு அவர் நடிக்கவில்லை. இதற்கிடையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி தற்போது புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். படத்துக்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி, ரவி மரியா, வையாபுரி, முத்துக்களை, 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்ட்ராயன் , லேகா ஸ்ரீ , டி.கே. ஸ்ரீனிவாசன், சத்திய சொல்லிட்டு நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள்.


இது தவிர நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், நடிகர் மயில்சாமி மகன் அன்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். இந்த படத்தை சாய் ராஜா கோபால் எழுதிய இயக்குகிறார் . அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகிறது.


Similar News