1000 கோடியில் தன் கனவு படத்தை உருவாக்கும் இயக்குனர் ஷங்கர்

இந்தியன் 2 படம் முடிந்த பிறகு இயக்குனர் ஷங்கர் மிகப் பிரமாண்டமாக படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

Update: 2022-07-13 09:55 GMT

இந்தியன் 2 படம் முடிந்த பிறகு இயக்குனர் ஷங்கர் மிகப் பிரமாண்டமாக படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.




 

பிரம்மாண்டத்துக்கான பெயர் பெற்ற இயக்குனர் ஷங்கர் தற்பொழுது ராம்சரண் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகிறது, இந்த படத்தை முடித்த கையுடன் அடுத்து இந்தியன் 2 படத்தை மீண்டும் துவங்குகிறார் இயக்குனர் ஷங்கர்.




 

இந்த நிலையில் புதிதாக ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒன்றில் மிகப்பெரிய கனவு படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் ஷங்கர், இந்த திரைப்படத்தில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ராம் சரண் ஆகியோர் இணைந்து நடிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. தண்ணீருக்கு அடியில் நடக்கும் அறிவியல் கலந்த கதையில் இந்த படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இயக்குனர் ஷங்கரின் கனவு படமாக இருக்கும் எனவும் இந்திய சினிமாவை வேறொரு தளத்திற்கு இந்த படம் எடுத்துச் சொல்லவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News