'கேன்ஸ்' பட விழாவில் உடையால் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட ஐஸ்வர்யா ராய்

வித்தியாசமான உடை அணிந்து வந்து 'கேன்ஸ்' பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் பலரையும் கவர்ந்தார்.

Update: 2023-05-20 10:00 GMT

பிரான்ஸ் நாட்டின் 'கேன்ஸ்'  நகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா, ஆஸ்கார் விருது வழங்கும் விழாவிற்கு அடுத்தபடியான உயரிய விழாவாக கருதப்படுகிறது. 76- வது கேன்ஸ் பட விழா தொடங்கியுள்ளது. இதில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வலம் வருவதை மிகப்பெரிய கௌரவமாக கருதுவார்கள். இந்தியாவிலிருந்து முன்னாள் உலக அழகி மனுஷி சில்லார், நடிகைகள் சாரா அலிகான், இஷா குப்தா , மிருனாள் தாகூர் உள்ளிட்ட பிரபலங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றனர்.


முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராயும் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றார். அப்போது அவர் கருப்பு மற்றும் சில்வரால் ஆன கவுனை அணிந்து இருந்தார். அந்த கவுன் அலுமினிய பெயிலெட்கள்  மற்றும் கிரிஸ்டல்களால் ஆன கூரை வடிவ ராட்சத சில்வர் பூட்டை வைத்து தலையை கவர் செய்யும் வகையில் இருந்தது. இந்த வித்தியாசமான உடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.


ஒவ்வொரு முறையும் கேன்ஸ் பட விழாவுக்கு புதுமையான உடைகளில் வந்து கவனம் ஈர்க்கும் ஐஸ்வர்யாராய் இந்த முறையும் அதை பின்பற்றினார். அதேவேளை இது உடையா அல்லது மேற்கூரையா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் கேலி செய்தும் பதிவிட்டு வருகிறார்கள்.

Similar News