மலைக்கோட்டை நகரில் அஜித் - குவிந்த ரசிகர்கள்
திருச்சியில் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக அஜித் வருகை புரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக அஜித் வருகை புரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பழக்கம் உள்ளவர், முறையாக பயிற்சி எடுத்தவர் தற்பொழுது இவர் திருச்சியில் உள்ள மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைப்பில் கிளப் சார்பில் 47வது மாநில துப்பாக்கி சூடு போட்டி கடந்த 24ஆம் தேதி துவங்கியது ,வரும் 31-ஆம் தேதி நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் திருச்சி வந்தார் அப்பொழுது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.