தென்னிந்திய படங்களில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் - அக்சய் குமார்

'அல்லு அர்ஜுன் என்னுடன் நடிக்க வேண்டும்' என அக்ஷய்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-03 07:01 GMT

'அல்லு அர்ஜுன் என்னுடன் நடிக்க வேண்டும்' என அக்ஷய்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.





புஷ்பா படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்து விட்டார், இந்நிலையில் இந்தி திரையுலகத்தில் தற்பொழுது பான் இந்தியா படத்தின் மோகம் ஆரம்பித்துள்ளது. தற்பொழுது அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான 'சாம்ராட் பிரித்திவிராஜ்' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய அக்ஷய் குமார் கூறியதாவது,




'பான் இந்தியா படம் என மட்டும் பாருங்கள், தயவு செய்து வடக்கு தெற்கு என பிரித்து பிடித்து பேசுவதை நிறுத்துங்கள். இப்போதுதான் அனைவரும் இணைந்து பணியாற்றும் சூழல் அமைந்திருக்கிறது, இது தொடரவேண்டும் அல்லு அர்ஜுன் என்னுடைய படங்களில் உடனே நடிக்க வேண்டும். இன்று தென்னிந்திய படத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். இப்பொழுது இந்த புதிய நடைமுறை ஆரம்பிக்க வேண்டும்' என தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

Similar News