வாரிசு படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த விஜய் - ரசிகர்கள் ஆரவாரம்

விஜய் ரசிகர்களுக்கு வாரிசு படப்பிடிப்பு தளத்தில் தடியடி நடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-28 03:49 GMT

விஜய் ரசிகர்களுக்கு வாரிசு படப்பிடிப்பு தளத்தில் தடியடி நடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.




 

தற்போது விஜய் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள என்னூரில் பிரம்மாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. விஜய்யின் வாரிசு வாரிசு சென்னையில் நடைபெறுகிறது என்ற தகவல் அறிந்ததும் அவர் ரசிகர்கள் படை எடுக்க தொடங்கி விட்டார்கள், ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் படையெடுப்பு அதிகரித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வந்தது.




 

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் அங்கு அதிகமாக குவிந்ததால் விஜய் ரசிகர்களை போலீஸ் தடியடியுடன் அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர், இதனால் கோபப்பட்ட விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிரான டிரண்ட் செய்து வருகின்றனர். காவல்துறையினர் எப்படி எங்களை விரட்டி அடித்தார்கள்? நாங்கள் ரசிகர்கள் தானே அவரை பார்க்க தானே வந்தோம் எங்களை கை அசைத்து கூட இருக்கக் கூடாதா என கேட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர் இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று விஜய் தனது ரசிகர்களை சந்தித்தார், ரசிகர்கள் ஆரவாரமாக விஜய்'க்கு கையசைத்து மகிழ்ந்தனர்.




Similar News