போதை பொருள் வழக்கில் நடிகை சர்மி இன்று ஆஜர் !

Cinema News.

Update: 2021-09-02 09:15 GMT

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆஜரானார் நடிகை சர்மி.




 


தெலுங்கு சினிமா உலகில் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது பற்றிய பல துறைகளின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் நேற்று விசாரணைக் குழுவினர் முன் ஆஜரானார். இந்த வழக்கில் 12 தெலுங்கு சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




 


இதனைதொடர்ந்து இன்று பூரி ஜெகன்னாத் உடன் சினிமா தயாரிப்பாளராக இருக்கும் நடிகை சார்மி அமலாக்கப் பிரிவு முன் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இந்த போதை பொருள் வழக்கில் மேலும் பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News