முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியதவி வழங்கிய நடிகர் வடிவேலு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல வேலை வாய்ப்புகள் முடங்கியுள்ளது. இதனால் ஏழை, எளியோர்களுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் நிதியதவிகளை பெற்று வருகிறது.

Update: 2021-07-14 05:44 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல வேலை வாய்ப்புகள் முடங்கியுள்ளது. இதனால் ஏழை, எளியோர்களுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் நிதியதவிகளை பெற்று வருகிறது.


அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை தமிழக அரசுக்கு வழங்குங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதன்படி தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் கல்வி நிறுவன உரிமையாளர்கள், சினிமா நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், காமெடி நடிகர் வடிவேலு இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

Tags:    

Similar News