'டிமான்ட்டி காலனி 2' வேற லெவலில் இருக்கும் - அஜய் ஞானமுத்து நம்பிக்கை

'டிமான்ட்டி காலனி 2' குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து புதிய தகவல் வெளியிட்டுள்ளார்.

Update: 2022-12-27 13:13 GMT

'டிமான்ட்டி காலனி 2' குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து புதிய தகவல் வெளியிட்டுள்ளார்.




 


இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிகவும் வெற்றியடைந்த 'டிமாண்டி காலனி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் துவங்கப்பட்டது.




 


தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிவடைந்துள்ளது இந்த படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளதாகவும் அவை திருப்தியாக இருப்பதாகவும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகம் திகில் கதைக்களத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News