'தலைநகரம் 2' படப்பிடிப்பு நிறைவு - வெளியீடு எப்போது?
சுந்தர்.சி நடித்த உருவாகி வந்த 'தலைநகரம் 2' படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
சுந்தர்.சி நடித்த உருவாகி வந்த 'தலைநகரம் 2' படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக இருந்த சுந்தர்.சி நடிகராக அவதாரம் எடுத்தார், சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இடம்பெற்ற வடிவேலு நகைச்சுவை கட்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது முடிந்துள்ளது. வி.இசட்.துரை இயக்கத்தில் தயாராகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது முடிந்துள்ளதை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.