ராம்சரனை கோபப்படுத்திய கேள்வி

குழந்தை பிறப்பு உவகாரம் குறித்து நடிகர் ராம்சரனிடம் கேள்வி எழுப்பியதால் அவர் கோபம் அடைந்தார்.

Update: 2022-07-15 05:48 GMT

குழந்தை பிறப்பு உவகாரம் குறித்து நடிகர் ராம்சரனிடம் கேள்வி எழுப்பியதால் அவர் கோபம் அடைந்தார்.




தெலுங்கில் நடிகர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகராக இருக்கிறார். அவரின் திருமண ஆண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்டது, இந்நிலையில் அவரிடம் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.




இந்த கேள்விக்கு பதில் அளித்த ராம்சரண் கூறியதாவது, நான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகன், அவர் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இதற்கிடையில் குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றி நாங்கள் யோசிக்க போவதில்லை, இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ள இன்னும் எங்களுக்கு பல ஆண்டுகள் ஆகும். எங்கள் தனிப்பட்ட வாழ்வை பற்றி எதற்காக கேள்வி எழுப்புகிறீர்கள்' என கட்டமாக பதில் அளித்துள்ளார்.

Similar News