தமிழ்நாட்டை விட வெளிநாடுகளில் வசூலை குவிக்கும் சோழர்களின் வரலாறு - 'பொன்னியின் செல்வன்' மாபெரும் சாதனை

தமிழ்நாடு வசூலை மிஞ்சும் பொன்னியின் செல்வனின் வெளிநாட்டு வசூல்.

Update: 2022-10-05 12:48 GMT

அமரர் கல்கியின் காவியமான "பொன்னியின் செல்வன்" நாவல் திரைப்படமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என முன்னனி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.




 

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற "பொன்னியின் செல்வன்" தமிழ் சினிமா இதுவரை காணாத வசூல் சாதனை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் வெளியான 6 நாட்களில் 100கோடி வசூலை கடந்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதுவரை தமிழ் சினிமாவில் எந்த திரைப்படமும் இவ்வளவு குறுகிய நாட்களில் 100கோடி வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




 



"பொன்னியின் செல்வன்" திரைப்படத்திற்கு தமிழ்நாட்டை விட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது ஆச்சரியமான தகவல், வெளியான 5 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் 105கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டு வசூலை மிஞ்சி புதிய சாதனை படைத்துள்ளது.

வரும் நாட்களில் "பொன்னியின் செல்வன்" பல புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News