சூப்பர் ஸ்டாரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன் - தேசிங்கு பெரியசாமி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கண்டிப்பாக இயக்குவேன் என இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கண்டிப்பாக இயக்குவேன் என இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.
துல்கர் சல்மான் நாயகனாக நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி, அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தேசிங் பெரியசாமியை கூப்பிட்டு பாராட்டியதோடு கண்டிப்பாக நாம் படம் செய்வோம் என கூறியது அப்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாக வெளியானது.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி தற்போது அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ரஜினி என்னுடைய இரண்டாவது படத்தில் நடிக்கவில்லை ஆனால் நான் கண்டிப்பாக எதிர்காலத்தில் ரஜினியை வைத்து படம் இயக்குவேன் அதோடு எனது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.