ராஜமௌலி - மகேஷுபாபு கூட்டணியில் உருவாகும் படம் இரண்டு பாகமா? விஜயேந்திர பிரசாத் கூறிய சூப்பர் தகவல்

ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் மிகபெரிய வரவேற்பை பெற்றது, இந்நிலையில் தன்னுடைய அடுத்த புதிய படத்தில்

Update: 2023-01-02 07:41 GMT

ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் மிகபெரிய வரவேற்பை பெற்றது, இந்நிலையில் தன்னுடைய அடுத்த புதிய படத்தில் மகேஷ்பாபு நடிப்பில் இயக்குவதற்கு தயார்படுத்தி கொண்டிருக்கிறார். ராஜமவுலி படங்களுக்கு அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதுவதுதான் வழக்கம்.


 



 


தற்போது ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படம் குறித்த தகவலை விஜயேந்திர பிரசாந்த் வெளிட்டு உள்ளார். சமீபத்தில் ஆயிரம் கோடிக்குமேல் வசூலித்த ஆர்.ஆர்.ஆர் படம் ஜப்பானில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராஜமவுலியின் தந்தை கூறுகையில் ஏற்கனவே ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் இடந்து பாகங்களை கொண்டது.


 



 


 


தற்போது மகேஷ்பாபு வைத்து அவர் இயக்கவுள்ள படமும் 2 அல்லது அதற்கு மேலும் பாகங்கள் கொண்ட படமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும், இந்த படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஹீரோ கேரக்டர் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு கதைக்களம் கொண்டதாக அமையும் என்று கூறியுள்ளார். இந்த படத்திற்க்கான கதை தற்போது தயாராகி உள்ளதால் இந்த ஆண்டில் அதாவது 2023ல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் நான்கு பாகங்களாக உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.



Similar News