'நான் கும்புடுறதே மீனாட்சி தாய்தான், நான் அப்படி சொல்லுவேனா அய்யா' - சரண்டரான சூரி

தவறான உள்நோக்கத்துடன் நான் எதையும் சொல்லவில்லை என நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-08-09 12:38 GMT

தவறான உள்நோக்கத்துடன் நான் எதையும் சொல்லவில்லை என நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.




 


இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த 'விருமன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிலதினங்களுக்கு முன் மதுரையில் நடைபெற்றது. அதில் பேசிய சூரி ஆயிரம் கோவில் கட்டுவதை விட, அன்ன சத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார், எதற்கு இந்து மத ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியது.


 



இந்நிலையில் 'விருமன்' படத்திற்கு சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி அந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளித்தார். அதில், 'நான் எப்போதும் மீனாட்சி அம்மனை கும்பிட்டு தான் பேசுவேன் எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும் நான் நடத்தும் ஹோட்டல் அம்மன் பெயர் தான் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. நான் படிக்காதவன் அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும்' என பேசினார்.

Similar News