பனையூரில் பிரியாணியுடன் சந்திப்பு - ரசிகர்களை குஷிப்படுத்திய விஜய்

சென்னை பனையூரில் தனது ரசிகர்கள் சந்திப்பை கோலாகலமாக நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய்.

Update: 2022-11-21 02:03 GMT

சென்னை பனையூரில் தனது ரசிகர்கள் சந்திப்பை கோலாகலமாக நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் அவ்வப்போது ரசிகர்களை சந்திப்பது வழக்கம், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் வரும் பொங்கலை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாவதால் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை விஜய் சந்தித்தார்.

நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த விஜய் மன்ற இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், 'ரசிகராக இருந்தாலும் சரி அடிமற்ற தொண்டராக இருந்தாலும் அவர்களை சந்திப்பது தான் முதல் வேலை' என விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறினார்.

Similar News