அரசியல் என்னை விட்டு விலகவில்லை - திடீரென அரசியல் பேசும் சிரஞ்சீவி, மீண்டும் அரசியல் பிரவேசமா?

தெலுங்கில் காட்பாதர் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக சிரஞ்சீவி பேசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2022-09-20 13:15 GMT

தெலுங்கில் காட்பாதர் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக சிரஞ்சீவி பேசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.




 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கடந்த 2008 ஆம் ஆண்டு 'பிரஜா ராஜ்ஜியம்' என்ற கட்சியை துவக்கினார் 2009 நடந்த தேர்தலில் 20% ஓட்டுக்களை பெற்றார். பின் அவரது சொந்த தொகுதியிலே போட்டியிட்டு தோல்வி அடைந்தார் அதற்கு பிறகு சில ஆண்டுகளில் தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்துக் கொண்டதுடன் மட்டுமல்லாமல் 2014 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து முழுவதுமாக விளங்கினார்.




 

இந்நிலையில் தனது சமூக வலை பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பேசிய சிரஞ்சீவி, 'அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் ஆனால் அரசியல் என்னை விட்டு விலகவில்லை' என பேசி உள்ளார் இந்த ஆடியோவால் சிரஞ்சீவி ஏதேனும் கட்சியியல் இணைய போகிறாரா அல்லது சினிமா பிரமோஷனுக்காக பேசுகிறாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வருகிறது.

Similar News