ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்த ராஜமௌலி - உலகம் முழுவதும் படங்கள் வெளியிட திட்டம்

இயக்குனர் ராஜமௌலி அடுத்தபடியாக ஹாலிவுட் திரைத்துறையில் தடம் பதிக்கும் பணிகளை துவங்கிவிட்டார்.

Update: 2022-09-24 09:19 GMT

இயக்குனர் ராஜமௌலி அடுத்தபடியாக ஹாலிவுட் திரைத்துறையில் தடம் பதிக்கும் பணிகளை துவங்கிவிட்டார்.


 



இந்திய அளவில் ஆர்.ஆர்.ஆர், பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்தபடியாக ஹாலிவுட் நிறுவனம் ஒன்றுடன் கரம் கோர்த்துள்ளார். தற்பொழுது மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்கி வரும் ராஜமவுலி அடுத்தபடியாக மகாபாரதத்தை மூன்று பாகங்களாக இயக்கவிருக்கிறார்.




 

இந்த நிலையில் ராஜமௌலி அவர்களுடன் ஹாலிவுட் நிறுவனம் ஒன்று கைகோர்த்து இருக்கிறது, கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட் ஏஜென்சி என்ற நிறுவனம் ஹாலிவுட் படங்களை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ராஜமௌலியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது அதன்படி இனி ராஜமௌலி இயக்கும் படங்களை ஹாலிவுட் திரையுலகம் உட்பட உலகின் பல இடத்திலும் சந்தைப்படுத்தும் பணியை இந்த நிறுவனம் செய்ய இருக்கிறது, மகேஷ் பாபு நடிக்கும் பட்சத்தில் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது. 

Similar News