பணத்துக்காக ஆபாச காட்சிகளில் எல்லை மீறி அவமானப்பட்ட நடிகர்
ஆபாச காட்சிகளில் பணத்துக்காக நடித்து பிரபல இந்தி நடிகர் அவமானப்பட்ட சம்பவம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
மனோஜ் வாஜ்பாய் இவர் தமிழில் விஷாலின் சமர், சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் மேலும் புகழ்பெற்றார் . இந்த நிலையில் மனோஜ் வாஜ்பாய் அளித்துள்ள பேட்டியில் இதற்கு முன்பு நான் ஒரு மோசமான படத்தில் நடித்து அவமானப்பட்டேன் . அந்த படத்தை பார்ப்பதற்காக என் மனைவி தியேட்டருக்கு சென்றார். படத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அது ஒரு கெட்ட படம் .அதில் நான் ஹீரோயின்களோடு ரொமான்ஸ் செய்து கொண்டே இருப்பேன் .
எனது கதாபாத்திரத்தை பார்த்து தியேட்டரில் இருந்த சிலர் காட்சிகள் ஆபாசமாக இருப்பதாக கேவலமாக பேசி உள்ளனர். என்னுடன் நடித்த நடிகைகளையும் ஏளனமாக பேசினார்களாம் .இதனால் மனைவி என்னிடம் கோபப்பட்டதோடு "பணத்திற்காக இது போன்ற கேவலமான படங்களில் நடிப்பதை விட்டு விடுங்கள் தியேட்டர்களில் அவர்கள் பேச்சு கேட்டு அவமானமடைந்தேன். ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்" என்றார். அதன் பிறகு தான் நான் கதைகளை தேர்வு செய்யும் விதத்தை மாற்றிக் கொண்டேன்.