ராம் சரண் படத்தில் மேலும் பிரமாண்டம் சேர்க்கும் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை கமல் நடிப்பில் இயக்கி வந்த போது சில பல பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தை லைக்கா நிறுவனம் கிடப்பில் போட்டது.

Update: 2023-01-26 12:21 GMT

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை கமல் நடிப்பில் இயக்கி வந்த போது சில பல பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தை லைக்கா நிறுவனம் கிடப்பில் போட்டது. இதனால் இயக்குனர் சங்கர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கத் தயாரானார். இதற்குப் பிறகு லைக்கா நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்ப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது. இதில் சாதகமான தீர்ப்பு ஷங்கர் பக்கம் வரவே ராம் சரண் நடிக்கும் 15 வது படத்தை இயக்கி வந்தார்.

அந்த நிலையில் ஷங்கருக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையான பிரச்சனை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது இதை தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, ராம்சரண் 15 ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி இயக்கி வருகிறார். இதனால் ஆர்சி 15 படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தாமதம் ஆகி வருகிறது. மேலும் பல மாதங்கள் ஆர்சி 15 படத்தின் எடிட்டிங் செயல்முறை மற்றும் விஷுவல் எபெக்ட்-க்கு நீடிக்க கூடும் என்று கூறப்படுகிறது.

ஆதலால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகும் இறுதிக்கட்ட பணிகள் முடிவதற்கு அதிக கால அவகாசம் ஏற்படும் என்பதால் அப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு 2024 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக ஆர்சி 15 படத்தில் நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானியும், அஞ்சலி ஒரு முக்கிய வேடத்திலும் நடித்த வருகிறார்.

Similar News