நடிப்பு அரக்கன் என்ற பெயரெடுத்த எஸ்.ஜே.சூர்யா வின் அடுத்த கூட்டணி

டைரக்டர் ஆகவும் நடிகராகவும் அனைவர் மனதிலும் இடம் பிடித்த எஸ்.ஜே.சூர்யா நானியுடன் அடுத்து ஒரு புதிய படத்தில் இணைகிறார்.

Update: 2023-10-27 09:00 GMT

டைரக்டர் ஆகவும் கதாநாயகனாகவும் முத்திரை பதித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த 'மார்க் ஆண்டனி' படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. லாரன்ஸ் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.


இந்த நிலையில் நானி கதாநாயகனாக நடித்த தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பலமொழிகளில் தயாராக உள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். இதிலும் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இது நானிக்கு 31-வது படம் .இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். விவேக் ஆத்ரேயா டைரக்டர் செய்கிறார். படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News