பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு - காரணம் என்ன?
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பில்கேட்சை சந்தித்தது பரபரப்பாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பில்கேட்சை சந்தித்தது பரபரப்பாகியுள்ளது.
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு சமீபத்தில் நடித்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அடுத்ததாக எந்த படம் அவர் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், மகேஷ் பாபுவும் அவரது மனைவியும் உலக பணக்காரர்கள் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்சை சந்தித்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மகேஷ் பாபு, 'பில்கேட்சை சந்திக்கும் மகிழ்ச்சியான வாய்ப்பு எனக்கு கிடைத்தது, இதுவரை உலகம் பார்த்த மிகச்சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவர் ஆனால் மிகவும் எளிமையான மனிதர். உண்மையில் இவர் ஒரு உத்வேகம்' என குறிப்பிட்டு இவர் பகிர்ந்த புகைப்படம் தற்பொழுது இணையங்களில் வைரலாகி வருகிறது.