மஞ்சு வாரியாருக்கு மத்திய அரசு பாராட்டி அளித்த சான்றிதழ் - எதற்காக?
மத்திய அரசு நடிகை மஞ்சு வாரியரை பாராட்டி உள்ளது
மத்திய அரசு நடிகை மஞ்சு வாரியரை பாராட்டி உள்ளது
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையான ஒருவர் மஞ்சு வாரியார், இவர் தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் பிறந்தவராக இருந்தாலும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார், கடந்த மூன்று ஆண்டுகளில் 20 படங்களில் நடித்தார் தற்பொழுது மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜி.எஸ்.டி மற்றும் வரி கணக்குகளை உரிய நேரத்தில் சமர்ப்பித்த காரணத்தினால் நடிகை மஞ்சுவாரியருக்கு மத்திய நிதியமைச்சகத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது, சரியாக வரி செலுத்துபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 'நேர்மையாக வரி செலுத்துபவர் சான்றிதழை' நடிகை மஞ்சு வாரியார் பெற்றுள்ளார்