நான் கொடுத்து வைத்தவள் - 'காந்தாரா' திரைப்பட வாய்ப்பு பற்றி 'லீலா' சப்தமி கெவுடா

தற்பொழுது மிகவும் வெற்றி பெற்ற காந்தாரா திரைப்படத்தின் சப்தமி கெவுடா 'காந்தாரா திரைப்பட வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ' என நெகிழ்ந்துள்ளார்.

Update: 2022-10-17 10:15 GMT

தற்பொழுது மிகவும் வெற்றி பெற்ற காந்தாரா திரைப்படத்தின் சப்தமி கெவுடா 'காந்தாரா திரைப்பட வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ' என நெகிழ்ந்துள்ளார்.




 

மொழி எல்லைகளை கடந்து மற்றும் ஒரு கன்னட திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. கன்னட படமான காந்தாரா இப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் கன்னட நடிகை சப்தமி கவுடா நடித்துள்ளார். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது.




 

இப்படம் குறித்து கருத்து தெரிவித்த சப்தமி கொவுடா கூறியதாவது, 'இந்த படத்தில் என்னை நடிக்க வைக்க தொடர்பு கொண்ட போது இந்த கதாபாத்திரம் திரையில் எப்படி இருக்கும், படத்தின் பெயர் பற்றி கூட எந்த யோசனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் திறமை வாய்ந்த ரிஷப் சாரும் அவருடைய குழுவினரும் இந்த படத்தை நான் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தை ஆர்வத்தையும் எனக்குள் ஏற்படுத்தினர். முதன் முதலில் இதன் ஸ்கிரிப்ட் படித்த பொழுது லீலா கால பாத்திரம் எப்போதும் சிறப்பான ஒன்றாக அமையும் என தோன்றியது, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை தேர்வு செய்ததற்கு நன்றி' என சப்தமி கவுடா கூறியுள்ளார்.


  

Similar News