வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கதையே கிடையாது - சஸ்பென்ஸ் எகிறவைத்த கெளதம் மேனன்

'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் கதை என்னவென்று எனக்கே தெரியாது என கௌதம் மேனன் கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Update: 2022-09-04 14:06 GMT

'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் கதை என்னவென்று எனக்கே தெரியாது என கௌதம் மேனன் கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 



சிலம்பரசன் நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு' இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.


 



அதில் பேசிய கௌதம் மேனன் கூறியதாவது, 'நதிகளில் நீராடும் சூரியன்' என தான் முதலில் தலைப்பு வைத்திருந்தேன் திடீரென ஜெயமோகன் ஒரு லைன் சொன்னார் ஆனால் அது புது ஹீரோ பண்ணக்கூடிய கதை என்றார் ஆனால் நான் சிம்பு புது ஹீரோ போல் உழைப்பர் என ஆரம்பித்தேன். சிம்புவுடன் கதை சொன்ன போது ஓகே சொல்லிவிட்டார் ஒரு மார்னிங் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் தான் படம். கதை என்னன்னு எனக்கே தெரியாது புது விஷயமாக, ஒரு நல்ல படம் செய்துள்ளோம் என நம்புகிறோம்' என்றார்.

Similar News