மசாலா பொருட்களில் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ளும் இதன் அற்புத பலன்கள்!

Update: 2021-06-29 00:30 GMT

பட்டை என்பது ஒரு மாசாலா பொருள் என்பதைக் காட்டிலும் அதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. நமது சமையல் அறையில் உள்ள மஞ்சளை போல பாரம்பரியமாக பட்டை பயன்படுத்தப்படாமல் போனாலும் இந்த மாசாலா பொருளின் ஆற்றும் குணத்தை நம்மால் மறுக்க முடியாது. ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்த பட்டை உணவின் சுவையை கூட்டுவதில் வல்லமை கொண்டது. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை மேம்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.


ஆராய்ச்சியாளர்களை பொருத்த வரையில் இருக்கக் கூடிய 66 மசாலா பொருட்களில், பட்டை தனது அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்டுகளின் அளவால் முதலிடத்தை பிடிக்கிறது. பட்டையில் உள்ள சிறந்த பொருட்களான சின்னமிக் ஆசிட் தான் இதற்கு மருத்துவ பயன்களை தருகிறது. மேலும் இதில் ஃபிளேவனாய்ட்ஸ் மற்றும் பீனாலிக் காம்பௌன்டுகளும் உள்ளது. அதிகமான ஃபிளேவனாய்ட்ஸ் நிறைந்த பட்டை வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் பட்டையில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடின் அளவை குறைத்து வீக்கத்தை குறைக்கிறது. காஸ்ட்ரிடிஸ் பிரச்சனையை போக்குகிறது.


இரத்தத்தில் அதிக அழுத்தம் இருப்பவர்கள் பட்டையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இரத்த குழாய்களை விரிவாக்கி அதன் மூலம் இரத்தத்தில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது. மூளையை பாதிக்கும் அல்சிமெர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய் ஏற்படாமல் பட்டை தடுக்கும். மூளையில் உள்ள அணுக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அதன் செயல்திறனை பாதுகாக்கிறது. 

Similar News