நடிகை ஜோதிகா வரிசையில், கோயில்கள் கட்டுவது குறித்து நடிகர் சூரியின் சர்ச்சை பேச்சு!

Update: 2022-08-06 06:31 GMT

மதுரை: நடிகர் சூர்யா தயாரித்த 'விருமன்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், காமெடி நடிகர் சூரி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி, 'விருமன்' திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தை நடிகர் 'சூர்யா' தயாரிக்க அவரது தம்பி 'கார்த்தி' கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் ஷங்கரின் மகள் 'அதீதி' இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களின் ஆரவாரத்துடன்  நடைபெற்றது.


விழாவில் படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்கள், படம் குறித்தும் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி குறித்தும் புகழ்ந்து பேசினர்.


அதன் வரிசையில் நடிகர் சூரி பேசியதாவது  "ஆயிரம் கோவில்கள் கட்டுவதைவிட, ஆயிரம் அன்ன சத்திரம் கட்டுவதைவிட, ஒருவரை படிக்க வைப்பது என்பது பல ஜென்மங்கள் பேசப்படும்." என்று நடிகர் சூர்யா செய்யும் நல உதவிகள் குறித்து பெருமையாக பேசினார்.


Full View



சூரியின் இக்கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "ஏன் மீண்டும் மீண்டும்  கோவில்கள் கட்டுவது மட்டும் ஒப்பிடப்படுகிறது? தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் கட்டுவதை ஒப்பிடாமல் போனது ஏன்?" என இந்து மத உணர்வாளர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


"கோயில்களுக்கு செலவு செய்யும் தொகையை, பள்ளிக்கூட பராமரிப்பு மற்றும் மருத்துவமனை பராமரிப்பு பணிகளுக்கு செலவு செய்யுங்கள்" என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடிகை மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா பேசியது சர்ச்சையை  ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News