வறுமையிலிருந்து இந்தியா மீண்டுள்ளது!! யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அறிக்கை!!

By :  G Pradeep
Update: 2025-11-21 15:52 GMT

உலக குழந்​தைகள் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி யுனிசெப் அமைப்பானது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2013 - 14 ம் ஆண்டு முதல் 2022 -23 ம் ஆண்டு வரை 24.8 கோடி குழந்தைகள் உட்பட மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வருவதற்கு இந்தியா உதவி செய்திருப்பதாக தேசிய பன்முக வறுமை குறியீடு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வறுமை விகிதமானது 29.2%லிருந்து 11.3% என குறைந்துள்ளது. இந்தியாவின் வறுமை குறைப்பில் சமூகத் துறை முதலீடு​கள் மூலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. 

மேலும் வறுமையை ஒழிப்பதற்காக மதிய உணவு திட்​டம், பெண் குழந்​தைகளை காப்​போம், பெண் குழந்​தைக்கு கல்வி அளிப்போம், போஷான் அபி​யான், சமக்ர ஷிக்‌ஷா, பிஎம் கிசான், தூய்மை இந்​தி​யா, ஜல் ஜீவன் திட்​டம் போன்றவை உதவி செய்துள்ளது. மேலும் ஊட்​டச்​சத்​து, கல்​வி, வரு​மான ஆதர​வு, சுகா​தா​ரம், அனை​வருக்​கும் வங்​கிக் கணக்கு வசதி உள்ளிட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு உதவி செய்து வருவதாகவும், 20.6 கோடி குழந்​தைகளுக்​கு வீடு, குடிநீர், கல்வி சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உட்பட்டவைகளில் ஏதேனும் ஒன்று கிடைக்காத நிலை தற்பொழுது வரை என்னிடத்தில் வருவதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News